Saturday, October 3, 2020

ராஜ யோகம்


தபஸ்யோகி சி. கே. சிவராமகிருஷ்ணன் A.B.T.  Parcel கம்பெனியில் முழுநேர வேலை பார்த்து வந்தார்.

அவர் சொல்லிக் கொடுத்தது ராஜயோகம் என்று சொல்வார்.  

சிலநேரம் பொது விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்து விட்டு “போட்டு றுவமா?” என்பார்.  அதாவது தபஸ்யோகம் (தியானம்) தொடங்கலாமா? என்று பொருள்.  ஏற்கெனவே தீக்ஷை பெற்றவர்கள் சேர்ந்து  கீழ்க்கண்ட  உறுதிப்பாட்டைச் (resolution/motto/vow)  சொல்வார்கள் (ஆங்கிலத்தில்தான்):

“With the help of Tapas Yoga, consisting of *concentration, meditation and contemplation*, the evolving self in me is tuning my mind into one of positive thinking followed by positive action in all aspects. My Self is bound by Tapas Yoga towards positive progressive evolution and it shall be utilized for the welfare and the happiness of the Self in me and in others.  All glories to Tapas Yoga movement”

உறுதி கூறி முடிந்தவுடன், விநாயகர் அகவல் அல்லது ஷெனாய் இசை போடுவார்.  எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவோம்.

புதிதாக வந்தவருக்கு அவர் தீக்ஷை கொடுக்கும் முறை:  சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு, தியானம் செய்தபடியே நம்மிடம் வந்து மூலாதாரத்தில் தொட்டுக் குண்டலினி சக்தியை எழுப்பி ஆக்ஞை சக்கரத்திற்குக் கொண்டு வருவார்.   மந்திரம் எதுவும் கிடையாது.  தீக்ஷை பெற்றபின் அமைதியுடன் ஆக்ஞைச் சக்கரத்தில் மனத்தை ஒருமைப் படுத்தவேண்டும்.  

ஒருவாரம் சென்றபின், சாந்தி செய்துகொள்ள வேண்டும். அதாவது, மூலாதாரத்திலிருந்து ஆக்ஞைக்குக் குண்டலினியை எழுப்பியபொழுது, அவருடைய சக்தியைக் கடன் கொடுத்தாரல்லவா?  இந்த ஒருவாரத்தில், நம்முடைய குண்டலினி மேலே கிளம்பி வரத்தொடங்கி இருக்கவேண்டும்

ஆகவே, தபஸ்யோகி, அவர் எழுப்பிய சக்தியை மீண்டும் ஆக்ஞையிலிருந்து மூலாதாரத்திற்கு இறக்குவார்.  இதை மிகவும் வற்புறுத்துவார்.  சிலர் தீக்ஷை பெற்ற பின் வராமலே இருந்துவிடுவார்கள்.  அவர்களின் நண்பர் மூலம் அவர்களை வந்து சாந்தி பெற்றுப் போகக் கட்டாயப் படுத்துவார்.

பல விஷயங்களுக்கு நடுவே அங்கங்கே ஆன்மிகப் பயிற்சி பற்றிய சில விஷயங்களைப் பேசுவார்.

இந்தப் பயிற்சியை “Concentration” என்று சொல்வார்.  இதைச் சில வாரங்கள் பழகி விட்டுப் பிறகு “Meditation” செல்வோம்.

******************************************************************


No comments:

Post a Comment

3. தாரணை ~ தியானம்

ஓரு நாள் தபஸ்யோகியிடம் “கான்ஸ்ட்ரெண்டேஷனுக்கும் (தாரணை) மெடிட்டேஷனுக்கும் (தியானம்) இடையே என்ன வேறுபாடு” என்று கேட்டேன்.  இது தியானப் பயிற்ச...